இந்தியாவில் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது
1 min read
The number of people vaccinated in a single day in India has crossed 2 crore
17/9/2021
பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதன்படி நேற்று நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், மாலை 5 மணிக்கு வெளியான நிலவரத்தின்படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி 1.30 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே ஒரு நாள் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.