காஷ்மீருக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
3 Pakistani terrorists shot dead as they enter Kashmir
23.9.2021
காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
பயங்கரவாதிகள்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பாரமுல்லா மாவட்டம் ஊரி நகரின் ராம்பூர் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து கடந்த திங்கட்கிழமை அதிகாலை சில பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, திங்கட்கிழமை முதல் ஊரி பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரி பகுதியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் கடந்த 3 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்குள் நுழைந்த 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே 47ரக துப்பாக்கிகள், 8 கைத்துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.