காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் பலி
1 min read
2 terrorists killed in Kashmir encounter
26.9.2021
காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகள்
ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் வாட்னிரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
முன்னதாக இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தேடுதல் வேட்டையின்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
2 பேர் பலி
அப்போது பாதுகாப்புபடையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தற்போது போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.