June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“பவானிபூர் இடைத்தேர்தலில் நான்தான் ஆட்டநாயகி”; மம்தாவிடம் தோற்ற பிரியங்கா பெருமிதம்

1 min read

“I am the heroine in Bhavanipur by-election”; Priyanka is proud of Mamta’s appearance

3/10/2021
பவானிப்பூர் இடைத்தேர்தலில் நான்தான் ஆட்ட நாயகி என்று மம்தா பானர்ஜியிடம் தோல்வி அடைந்த பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல்

மேற்கு வங்காளம் பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்தநிலையில், மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த நான் தான் தேர்தலில் ஆட்ட நாயகி என பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா கூறியதாவது:-

மோசடி வேலை

பல வாக்குச்சாவடிகளில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மோசடி வேலையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாக்குச்சாவடிகளில் மோசடியில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற, உங்கள் கட்சித் தலைவர்களை தயவுசெய்து அனுப்ப வேண்டாம் என நான் மம்தா பானர்ஜியை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

மக்களின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன், ஆனால் இந்த தேர்தலில் நான் என்னை தான் ‘ஆட்ட நாயகி’ என்பேன். ஏனென்றால், நான் மம்தா பானர்ஜியின் கோட்டையாக அறியப்படும் பவானிபூரில் போட்டியிட்டேன், முதல்-மந்திரியின் கோட்டையாக இருந்தாலும், மக்கள் பதிவான 57 சதவீத வாக்குகளில் எனக்கு 25,000க்கும் அதிகமான வாக்குகள் அளித்துள்ளனர். மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.