June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,390 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு

1 min read

Corona for 1,390 people in Tamil Nadu today; 27 deaths

7.10.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,432 -ல் இருந்து 1,390 ஆக சற்று குறைந்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,487 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,45,846 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,390 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,74,233 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,80,36,604 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 797 பேர் ஆண்கள், 593பேர் பெண்கள்.
தமிழகத்தில் 1,487 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,21,986 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 27 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,734 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக இருந்த நிலையில் இன்று 173 ஆக குறைந்துள்ளது.

கோவையில் இன்று 145 பேருக்கும் செங்கல்பட்டில் 107 பேருக்கும், ஈரோட்டில் 85 பேருக்கும், தஞ்சையில் 76 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 20 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.