காஷ்மீரில் என்கவுண்டர் முடிந்து 48 மணி நேரத்திற்கு பிறகு 2 வீரர்களின் உடல்கள் மீட்பு
1 min read
The bodies of 2 soldiers were recovered 48 hours after the encounter in Kashmir
16.10.2021
காஷ்மீரில் நடந்த என்கவுண்டர் முடிந்து 48 மணி நேரத்திற்கு பிறகு 2 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெறுகிறது.
கடந்த திங்கட்கிழமை கடந்த துப்பாக்கி சண்டையில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின்னர் வியாழக்கிழமை நடந்த சண்டையில் 2 வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 வீரர்களை காணவில்லை.
2 வீரர்களின் உடல்கள்
இந்நிலையில், துப்பாக்கி சண்டை நடந்த 48 மணி நேரத்திற்குப் பிறகு, காணாமல் போன 2 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன்மூலம் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுவே சமீபநாட்களில் நடந்த என்கவுண்டர்களில் அதிகபட்ச உயிரிழப்பு ஆகும்.