June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,192 பேருக்கு கொரோனா; 13 பேர் சாவு

1 min read

Corona for 1,192 people in Tamil Nadu today; 13 deaths

18.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,218 -ல் இருந்து 1,192 ஆக சற்று குறைந்துள்ளது. இன்று 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,423 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,26,786 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,88,284 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 711 பேர் ஆண்கள், 481 பேர் பெண்கள். இன்று 1,423 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,37,802 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 13 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,912 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக இருந்த நிலையில் இன்று 150 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 130 பேருக்கும், ஈரோட்டில் 88 பேருக்கும், செங்கல்பட்டில் 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 17 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.