விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உண்டு; சாலைகளை மறிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
Farmers have the right to struggle; Roads should not be blocked; Order of the Supreme Court
21/10/2021
விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உண்டு ஆனால் சாலைகளை மறிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியள்ளது.
வழக்கு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்கள் மற்றும் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் போக்குவரத்து மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகனங்கள் சாலைகளை பயன்படுத்த முடியாது நிலை ஏற்பட்டது.
தற்போது சில இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மறியல் கூடாது
அந்த மனு மீதான விசாரணையின்போது ‘‘விவசாயிகள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அதேபோல், மக்களுக்கு சாலைகளில் செல்லவும் உரிமை உண்டு. . எனவே சாலைகளை மறிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், விவசாய சங்கங்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு அடுத்த விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.