June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடிக்கு நடிகை சுதா சந்திரன் உருக்கமான வேண்டுகோள்

1 min read

Actress Sudha Chandran’s heartfelt appeal to Prime Minister Modi

22.10.2021
பிரதமர் மோடிக்கு நடிகை சுதாசந்திரன் “வேதனையாக இருக்கிறது.. உதவுங்கள்” என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை சுதாசந்திரன்

நடிகை சுதாசந்தின் சிறந்த பரதநாட்டியக் கலைஞர். தமிழ் மட்டுமின்றி பல இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்துள்ளார். நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
‘காஹின் கிஸ்ஸி ரோஸ்’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் , ‘நாகின்’ தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் சுதா சந்திரன்.

ஒரு விபத்தி்ல் கால் ஒன்றை இழந்த அவர் செயற்கை கால் மூலம் தொடர்ந்து நடனம் ஆடினார். அதன்பின்னர்தான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைதது. அவர் நடிக்கும்போது, நடனம் ஆடும் போதும் அவர் செயற்கை காலால் நடனம் ஆடுகிறார் என்பதே தெரியாது. இவர் தமிழிலும் மயூரி என்ற படம் மூலம் அறிமுகமானார். அதில் கால் இழந்த ஒரு நடன கலைஞராக வருவார்.

வேண்டுகோள்

நடிகை சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராமில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார். தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் “அவமானப்படுத்தப்படுவதை” தவிர்க்கலாம் என்று நடிகை கூறி உள்ளார்.

செயற்கை மூட்டுகளைப் பயன்படுத்தும் சுதா, ஒவ்வொரு முறையும் “வலிக்கிறது” என்று கூறி “கிரில்ஸ்” பாதுகாப்பு மூலம் தனது துன்பத்தை பகிர்ந்து உள்ளார்.

அவர் தனது வீடியோவில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோள். நான் சுதா சந்திரன், ஒரு நடிகர் மற்றும் நடனக் கலைஞர், நான் ஒரு செயற்கை மூட்டுடன் நடனமாடி வரலாற்றை உருவாக்கி, என் நாட்டை பெருமைப்படுத்தினேன். . ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது தொழில்முறை பயணம் செல்லும்போது,, நான் விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அது மனிதனால் சாத்தியமா மோடிஜி?

நம் நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நம் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த கிரில் வழியாக செல்லும் போது மிகவும் வலிக்கிறது …. எனது செய்தி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன் …. உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். என்றும் அவர் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.