June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தள்ளி வைப்பு; அதிமுக போராட்டம

1 min read

Postponement of indirect election for the post of Karur District Panchayat Deputy Chairman; AIADMK struggle

22/10/2021
தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவராக தமிழ்ச்செல்வியும் (திமுக), துணைத்தலைவராக உதயகிருஷ்ணனும் (காங்கிரஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட ஊராட்சி

தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 14 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 20ம் தேதி 14 பேர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் இன்று மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது .

மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 12 வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி (திமுக) மற்றும் கடையநல்லூர் பகுதி 6 வது வார்டு கவுன்சிலர் கனிமொழி (திமுக) ஆகியோர் போட்டியிட்டனர்.

மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் திட்ட இயக்குனர் சுரேஷ் மகளிர் திட்ட அலுவலர் குருநாதன் ஆகியோர் நடத்தினர்.

தமிழ் செல்வி தேர்வு

இதில் தமிழ்ச்செல்விக்கு 8 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட கனிமொழிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. இதனை அடுத்து தமிழ்ச்செல்வி மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மாவட்ட ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

துணைத் தலைவர் தேர்தலில் 8வது வார்டு உறுப்பினர் தி.உதயகிருஷ்ணன் (காங்கிரஸ்), 1வது வார்டு உறுப்பினர் வே.சந்திரலீலா (திமுக) ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் உதயகிருஷ்ணன் 9 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரலீலா 3 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவராக உதயகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் உதயகிருஷ்ணன் ஆகியோருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி எம்.எல்.ஏ., பழனிநாடார், வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன், ஆயிரப்பேரி முத்துசாமி, கராத்தே செல்வன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மா.மாரிமுத்து, இரா.தேவி, பி.சுதா, கனிமொழி, பூங்கொடி, சாக்ரடீஸ், முத்துலெட்சுமி, சுப்பிரமணியன், சி.சுதா, மைதீன்பீவி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.