தமிழகத்தில் இன்று கொரோனா 990 ஆக குறைந்தது: 20 பேர் சாவு
1 min read
In Tamil Nadu today the corona is at least 990: 20 deaths
1.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,009ல் இருந்து 990 ஆக சற்று குறைந்துள்ளது. 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,153 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,20,153 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,03,613 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,12,79,395 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 598 பேர் ஆண்கள், 392 பேர் பெண்கள். தமிழக்தில் 1,153 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,56,168 ஆக உயர்ந்துள்ளது.
20 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் 17 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,136 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக இருந்த நிலையில் இன்று 111 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 85 பேருக்கும், ஈரோட்டில் 73 பேருக்கம் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 10 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.