June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

விவசாயிகள் போராட்டத்தில் எம்.பி. கார் மீது தாக்குதல்-பா.ஜ.க தலைவர்கள் கோவிலில் சிறை வைப்பு

1 min read

MP in farmers’ struggle Attack on car- BJP leaders jailed at temple

6.11.20201

அரியானா விவசாயிகள் போராட்டத்தில் பா.ஜ.க. எம்பி கார் மீது தாக்குதல் நடத்தபட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதால் பா.ஜ.க தலைவர்கள் கோவிலில் சிறை வைக்கப்பட்டனர்.

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜ.க. எம்.பி ராம் சந்தர் ஜங்ராவின் காரை கறுப்புக் கொடிகளை ஏந்திய போராட்டக்காரர்கள் குழு தடுத்து உள்ளது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கார் மீது தாக்குதல் நடத்தினர்.

முற்றுகை

அப்போது காரில் அமர்ந்திருந்த ஜாங்ரா, தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக” கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காரை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
பாஜக குண்டர்கள்” தங்களை தாக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயி குல்தீப் ராணா படுகாயமடைந்து ஹிசாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் விவசாய தலைவர் ரவி ஆசாத் தெரிவித்தார்.

ஜங்ரா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி, நார்னவுண்ட் காவல் நிலையத்தில் விவசாயிகள் இன்று முற்றுகையில் ஈடுபட்டனர்.

கோவிலில் அடைத்து

ஆனால் ராணா கீழே விழுந்ததால் காயம் அடைந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த விவசாயிகள் பல பா.ஜ.க. தலைவர்களை ரோஹ்தக்கின் கிலோய் கிராமத்தில் உள்ள கோவிலில் அடைத்து வைத்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் புனித தலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றதை நேரலையில் காண பா.ஜ.க தலைவர்கள் அந்த கிராமத்தில் கூடி இருந்தனர்.

மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் அவர்களை விட மறுத்தனர்.

கோவிலை சுற்றி முற்றுகையிட்டு, விவசாயிகள் தங்களது டிராக்டர்ளை கோவிலுக்கு செல்லும் தெருக்களில் நிறுத்தி வைத்து உள்ளனர். விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் வரை கிராமத்திற்குள் நுழைய மாட்டோம் என்று பா.ஜ.க தலைவர்களிடம் உத்தரவாதம் அளிக்குமாறு விவசாயிகள் கூறி உள்ளனர்.

பா.ஜ.க. தலைவர்கள் மன்னிப்பு கேட்ட பிறகு ஏழு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் சில தலைவர்கள் தாங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என மறுத்து உள்ளனர்.

ரோஹ்தக் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவின் கோட்டையாகும், அவர் தற்போது கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். . விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் மீது பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.