தமிழகத்தில் இன்று 850 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு
1 min read
Corona for 850 people in Tamil Nadu today; 9 deaths
7.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 862ல் இருந்து 850 ஆக சற்று குறைந்துள்ளது. 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 958 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,01,825 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 850 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,09,080 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,19,32,574 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 496 பேர் ஆண்கள், 354 பேர் பெண்கள். இன்று 958 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,62,386 ஆக உயர்ந்துள்ளது.
6 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 6 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,220 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக இருந்த நிலையில் இன்று 129 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 96 பேருக்கும், செங்கல்பட்டில் 76 பேருக்குமூ ஈரோட்டில் 69 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது.
நெல்லையில் 7 பேருக்கும், தென்காசியில் ஒருவரும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.