6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்
1 min read
Strengthens to a barometric depression in 6 hours: Meteorological Center
10/11/2021
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந்தேதி தொடங்கியது. சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணியளவில் அது தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இது அடுத்த 6 நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி தமிழக வடகடலோர பகுதியை அடையும். காரைக்கால் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையக் கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.