தமிழகத்தில் இன்று 809 பேருக்கு கொரோனா; 14 பேர் சாவு
1 min read
Corona for 809 people in Tamil Nadu today; 14 dead
13.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 812 ல்
இருந்து 809 ஆக சற்று குறைந்துள்ளது. 14 பேர் உயிரிழந்து
உள்ளனர். 934 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்
கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் கொரோனா தமிழகத்தில் 1,01,034 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின்
எண்ணிக்கை 27,14,025 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,25,42,503 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 437 பேர் ஆண்கள், 372 பேர் பெண்கள். தமிழகத்தில் 934 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,68,001 ஆக உயர்ந்துள்ளது.
14 பேர் சாவு
தமிழகத்தில் 14 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,273 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக இருந்த நிலையில் இன்று 120 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 134 பேருக்கும், ஈரோட்டில் 76 பேருக்கும், செங்கல்பட்டில் 65 பேருக்கும், நெல்லையில் 11 பேருக்கும், தூத்துக்குடியில்3பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இன்று தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை.