July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 13,091 பேருக்கு கொரோனா; 340 பேர் சாவு

1 min read

Corona for a further 13,091 people in India; 340 deaths

13.11.2021

இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு, இன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒருநாளில் 13,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 13,091 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 1,38,556 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.