தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 805 people in Tamil Nadu today; 11 deaths
14.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 809 -ல் இருந்து 805 ஆக சற்று குறைந்துள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 929 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,03,684 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,14,830 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 464 பேர் ஆண்கள், 341 பேர் பெண்கள். இன்று 929 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,68,930 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,284 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக இருந்த நிலையில் இன்று 128 ஆக அதிகரித்துள்ளது.
கோவயைில் 125 பேருக்கும், ஈரோட்டில் 78 பேருக்கும், செங்கல்பட்டில் 63 பேருக்கும், நெல்லையில் 9 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் தூத்துக்குடியில் 7 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.