July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 802 பேருக்கு கொரோனா; 12 பேர் சாவு

1 min read

Corona for 802 people in Tamil Nadu today; 12 dead

15.11.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 805 ல் இருந்து 802 ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 918 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,01,070 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 800 பேருக்கும் பிரிட்டன் மற்றும் யு.ஏ.இ.,யிலிருந்து வந்த இருவரையும் சேர்த்து 802 கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,15,632 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 480 பேர் ஆண்கள், 322 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 918 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,69,848 ஆக உயர்ந்துள்ளது.

12 பேர் சாவு

தமிழ்நாட்டில் இன்று 12 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் அரசு மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,296 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.15 ம் தேதி)122 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 13 பேருக்கம், ஈரோட்டில் 77 பேருக்கும், செங்கல்பட்டில் 62 பேருக்கும், நெல்லையி்ல் 8 பேருக்கும், தூத்துக்குடியில் 6 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிப்பட்டது.
தென்காசி,பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.