தமிழகத்தில் இன்று 775 பேர் கொரோனா; 12 பேர் சாவு
1 min read
In Tamil Nadu today 775 people are corona; 12 dead
18.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 782ல் இருந்து 775 ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 896 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,01,635 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,17,978 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,30,54,078 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 464 பேர் ஆண்கள், 311 பேர் பெண்கள். தமிழத்தில் 896 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,72,564 ஆக உயர்ந்துள்ளது.
12 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் அரசு மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,336 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.18 ம் தேதி)126 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 112 பேருக்கும், ஈரோட்டில் 76 பேருக்கும், செங்கல்பட்டில் 58பேருக்கும், திருப்பூரில் 51 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 6 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் இன்று கொரோனா சாவு இல்லை.