இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா; 267 பேர் சாவு
1 min read
Corona for 10,302 newcomers in India; 267 deaths
20.11.2021
இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரு நாளில் 267 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த 16-ந்தேதி 9 ஆயிரத்துக்கு கீழே கொரோனா வைரஸ் பரவல் ஏறியும் இறங்கியும் வருகிறது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 12 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 10 ஆயிரத்து 302 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,44,89, 623 லிருந்து ஆக 3,44,999,25 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் 267 பேர் பலியாகினர். இதுவரை நாட்டில் 4 லட்சத்து 65 ஆயிரத்து 349 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.29 சதவீதம். உயிரிழப்பு விகிதம் 1.35 சதவீதமாக உள்ளது.
இன்று புதிதாக பாதிப்புக்கு ஆளானவர்களை காட்டிலும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் 10 ஆயிரத்து 302 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 11 ஆயிரத்து 787 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,97,921 லிருந்து 3,39,09,708 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடெங்கும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 868 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 0.36 சதவீதம் மட்டுமே.
தடுப்பூசி
இந்தியாவில் ஒரே நாளில் 51,59,931 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6,39,74,962 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 115.79 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.