June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா; 17 பேர் சாவு

1 min read

Corona for 739 people in Tamil Nadu today; 17 people were death

25-11-2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 744 ல் இருந்து 739 ஆக சற்று குறைந்துள்ளது. 17 பேர் உயிரிழந்து உள்ளனர். 764 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு :-

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் 1,01,993 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,23,245 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் இன்று 764 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,78,371 ஆக உயர்ந்துள்ளது.

17 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 17 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 115ஆக இருந்த நிலையில் இன்று (நவ.25 ம் தேதி)107 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 112 பேருக்கும், ஈரோட்டில்76 பேருக்கும், செங்கல்பட்டில் 69 பேருக்கம், திருப்பூர் 65 பேருக்கும், நெல்லையில் 7 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.