இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
1 min read
Pakistani terrorist shot dead as he tried to cross the Indian border
ஸ்ரீநகர், நவ.27-
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
பயங்கரவாதி
காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை தடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் திவீர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் பீம்பர் காலி பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று இரவு இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதி இந்திய எல்லைக்குள் நுழைவதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டனர்.
சுட்டுக்கொலை
இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினர். இதனால், இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் பயங்கரவாதியின் செயல் முறியடிக்கப்பட்டது. கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்பட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.