June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 740 பேருக்கு கொரோனா 11 பேர் சாவு

1 min read

In Tamil Nadu today 7 out of 740 corona 11 people died

27.11.2021

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 746ல் இருந்து 740 ஆக சற்று குறைந்துள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 765 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,01,030 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 740 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,24,731 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,39,68,345 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 442 பேர் ஆண்கள், 298 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்ற 765 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,79,895 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,454 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக இருந்த நிலையில் இன்று 105 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 112 பேருக்கும், ஈரோட்டில் 68 பேருக்கும், செங்கல்பட்டில் 56 பேருக்கும், திருப்பூரில் 54 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.