இந்தியாவில் புதிதாக 8,309 பேருக்கு கொரோனா; 236 பேர் சாவு
1 min read
Corona for 8,309 newcomers in India; 236 deaths
29.11.2021
இந்தியாவில் மேலும் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 8 ஆயிரத்து 774 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 8,309 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் இது சிறிது குறைவு. (கேரளாவில் மட்டுமே 4,350 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது).
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 309 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,80,832 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,68,790 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.36 சதவீதமாக உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9,905 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,08,183 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.34 சதவீதமாக உள்ளது.
சிகிச்சையில்…
மேலும் கடந்த 544 நாட்களில் குறைந்த அளவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,03,859 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 122,41,68,929 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 42,04,171 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 7,62,268 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64,02,91,325 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.