June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

”பிட் காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க திட்டம் ஏதும் இல்லை; நிர்மலா சீதாராமன் பேச்சு

1 min read

” There is no plan to recognize bitcoin as a currency; Nirmala Sitharaman Speech

29/11/2021

”பிட் காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிட்காயின்

சர்வதேச அளவில் பிட்காயின் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவிலும் பிட்காயின் மீது முதலீடு செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், பிட்காயின், எத்தீரியம், லைட்காயின் டீத்தர், சொலானா போன்ற கிரிப்டோகரன்சிகளில் அதிகளவில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. டிஜிட்டல் நாணயங்களில் முதலீடு தொடர்பான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர், முதலீடு செய்வதால் கிரிப்டோகரன்சி பொருளாதார ரீதியாக சவாலை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, கிரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்தும் மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகபடுத்தப்பட உள்ளது. இந்த மசோதாவின் மூலம் சில தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு இந்தியாவில் தடை கொண்டுவரப்படும். அதே நேரம், ரிசர்வ் வங்கி மூலம் அல்லது ஒப்புதலுடன் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

திட்டம் இல்லை

இந்த நிலையில் மக்களவையில் கிரிப்டோ கரன்சி குறித்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”பிட் காயினை ஒரு கரன்சியாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு திட்டம் ஏதும் இல்லை. பிட்காயின் குறித்த எந்தவிதமான புள்ளிவிவரத்தையும் அரசு சேகரிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.