தென்காசி மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டி
1 min read
Thirukkural siege competition in Tenkasi district
1.12.2021
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற உள்ள பெற திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற உள்ள பெற திருக்குறள் முற்றோதல் போட்டி 2021 -2022 ஆம் ஆண்டிற்கு மாணவ / மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .
விண்ணப்பங்கள் 2018 – 2019 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் 1330 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறளையும் ஒப்புவிக்க திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெறுகிறது . இந்தப் போட்டியில் 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ .10,000 ரூபாய் பத்தாயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது .
இந்தப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவர் இதற்கான திறனாய்வு திருநெல்வேலி மண்டலத் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரால் நடத்தப்படும் .
போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கவேண்டும் . இயல் எண் . அதிகாரம் எண் . பெயர் , குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல் , அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்கவேண்டும் . திருக்குறளின் அடைமொழிகள் , சிறப்புப் பெயர்கள் . சிறப்புகள் ஆகியவற்றையும் அறிந்திருக்கவேண்டும் .
திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் . ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது .
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ / மாணவியர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ ( www.tamilvalarchithurai.com ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 15.12.2021.
விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கப்பட வேண்டும்
இவ்வாறு தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் கூறியுள்ளார்.