June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஊசிக்கு பயந்த கண்ணாயிரம்(நகைச்சுவை கதை)

1 min read

Kannayiram Afraid of the syringe / Story by Thabasukumar

2.12.2021

கண்ணாயிரமும் பூங்கொடியும் வீட்டுக்குள் புகுந்த வெள்ளச்சேவலை எப்படி விரட்டலாம் என்று யோசித்தார் கள். அலமாரியில் ஏறி நின்ற சேவல் பாத்திரங்களை கீழே உருட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தது. கருவாட்டைகாட்டினால் சேவல் கீழே வரும் விரட்டிவிடலாம் என்று கண்ணாயிரம் யோசனை சொன்ன நேரத்தில் சேவல் ஒருசின்ன டம்ளரை கீழே தள்ளிவிட்டது. அது தரையில் உருண்டு ஓடியது. அதை பார்த்து கண்ணாயிரமும் பூங்கொடியும் அதிர்ச்சியில் நின்றபோது மற்றொரு அறையில் இருந்த செல்போன் ஒலித்தது.
இருவரும் அந்த அறையை நோக்கி ஓடினர். பூங்கொடி செல்போனை பாய்ந்து எடுத்தார். அருவா அமாவாசை பேசினார். அம்மா பூங்கொடி.. இப்பதான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தேன்.
டாக்டர் கட்டுபோட்டுவிட்டார். கல்லு ஆழமாக குத்தியிருக்கு. எவனோ..குறிபார்த்து எறிஞ்சிருக்கான். அவன் யாருன்னு தெரியல.. வலிதாங்க முடியவில்லை… கல்லைவீசினது யாருன்னு உனக்கு தெரியுமா.. என்று கேட்டார்.
பூங்கொடி… கண்ணாயிரம் பெயரை சொல்ல முயன்றபோது.. கண்ணாயிரம்…சொல்லாத..சொல்லாதே…என்று தடுத்தார். அந்த சத்தத்தை கேட்டு… அருவா அமாவாசை என்னம்மா.. சொல்லாத. சொல்லாதைன்னு சொல்லுறாரு..என்று கேட்க.. பூங்கொடி உஷாராக.. அப்பா.. என்னை பூனை கடிச்சுட்டுப்பா.. என்று கண்களை கசக்கினார். என்னம்மா..பூனைகடிச்சுதா..கண்ணாயிரம் கடிச்சானா.. என்று அருவா அமாவாசை கேட்க.. பூங்கொடி… இல்லப்பா.. பூனைதான்கடிச்சுது. நீங்க வாங்கித்தந்த கருவாட்டை டப்பாவில்போட்டு அலமாரியில் வைச்சிருந்தேனா.. அதை சேவல் உருட்டிவுட்டுச்சா.. அந்த கருவாட்டை எடுக்க பூனைவந்துச்சா.. அதைவிரட்டுறதுக்காக நான் கம்பெடுத்து விரட்ட, பூனை என் கையை கடிச்சுட்டுப்பா.. என்று அழுதாள்.
அருவா அமாவாசை.. சரிம்மா.. அழாத.. உடனே ஆஸ்பத்திரிக்குபோ.. ஊசி போடு.. ஒருமாதத்துக்கு கருவாடு சாப்பிடாதே…உடம்பை நல்லாபாத்துக்க.. என்று சொல்லிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.
பூங்கொடி.. ஆ… ஆ.. எங்க அப்பாவுக்கு. தலையிலே கல்லு ஆழமா பதிஞ்சிருக்கன்னு சொன்னாரு.என்று..ஆ…ஆ..என்று அழுதார்.
கண்ணாயிரம்.. அழாத.. வேற என்ன சொன்னாரு..என்று கேட்க.. பூனைகடிச்சுட்டுப்பான்னு சொன்னேன் உடனே ஆஸ்பத்திரிக்கு போன்னாரு.. நான் ஒருமாதத்துக்கு கருவாடு சாப்பிடக்கூடாதுன்னு.. சொன்னாருன்னு.. என்று சொன்னவர்..ஆ..ஆ..என்று அழுதார்.

கண்ணாயிரம் மெல்ல.. ம்.. இனி அழாத.. ஆட்டோ வரச்சொல்லு.. ஆஸ்பத்திரிக்கு போவோம். புறப்படுன்னு சொன்னார். சேவக்கோழி வீட்டுக்குள் நிக்குதே..அதை விட்டுட்டு எப்படிபோறது..என்று பூங்கொடி.. கேட்க.. ஆமா.. என்ன செய்யலாம்.. வா போய் பார்ப்போம் என்று கண்ணாயிரம் சொல்ல, இருவரும் சமையல் அறைக்கு சென்றார்கள். அலமாரியை பார்த்தார்கள் சேவலை காணவில்லை. ஆ.. சேவல் எங்க.. எங்கேயும் மறைந்திருக்கா..தேடு.. என்று கண்ணாயிரம் சொல்ல பூங்கொடி.. சமையல் அறைமுழுவதும் தேடினார். எங்கும் காணவில்லை.
சேவல் ஓடிட்டா..கதவுதிறந்துதான கிடக்கு..இந்தவழியா போயிருக்கும் போலிருக்குது.. சரி, நல்லவேளை. கருவாட்டை ஒண்ணும் பண்ணல.. அதை எடுத்து டப்பாவில் அடை என்றார் கண்ணாயிரம்.
உடனே.. பூங்கொடி அவசரஅவசரமாக கருவாடுகளை எடுத்து டப்பாவுக்குள்போட்டு அடைத்தார். அந்த டப்பாவை.. மற்றொரு அறைக்குள்வைத்து பூட்டிவிட்டு வந்தார்.
சீக்கிரம் புறப்படு..மீண்டும் சேவல் வந்துவிடக்கூடாது.. நான் கதவை பூட்டிட்டு வர்ரேன்.. என்று சொல்லிவிட்டு கண்ணாயிரம் ஓடிப்போய் கதவை பூட்டினார். பூங்கொடி சேலையைமாற்றிவிட்டு ஒரு பை மற்றும் செல்போன், மணிபர்ஸ் எடுத்துகொண்டுபுறப்பட்டார். ஆட்டோவுக்கு போன் பண்ணுனியா என்று கண்ணாயிரம் கேட்க இதோபண்ணுறன் என்று சொன்ன பூங்கொடி உடனடியாக ஆட்டோடிரைவருக்கு போன்பண்ணினார்.
அடுத்த வினாடி வீட்டுமுன் ஆட்டோவந்தது நின்றது
. கண்ணாயிரமும் பூங்கொடியும் கதவை பூட்டிவிட்டு ஆட்டோவில் ஏறினார்கள். அப்போது ஒரு பெண் ஓடிவந்து.. என்ன பூங்கொடி.. எங்கே போற..என்று கேட்க.. அது ஒண்ணும் இல்ல க்கா பூனைகடிச்சுட்டு.. அதான்.. ஆஸ்பத்திரிக்கு போறோம் என்றுசொன்னார்.
அந்த பெண்ணோ. நம்பாமல்.. பூனையா.. என்றபடி கண்ணாயிரத்தை சந்தேகமாக பார்க்க, கண்ணாயிரம் நான் இல்ல, நான் இல்ல.. பூனைதான் என்று சொன்னார்.
அந்த பெண், பூனையா இருந்தாலும்சரி, புருசனா இருந்தாலும்சரி, ஊசிபோட்டுரு.. எதுக்கும் நல்லது என்று சொன்னார். கண்ணாயிரம் கோபத்தில்.. டிரைவர்.. வேகமாக.. போங்க. என்றார். ஆஸ்பத்திரிக்கு ஆட்டோ பறந்தது.
ஆட்டோவுக்கு பணம் கொடுத்து விட்டு.. இருவரும் ஆஸ்பத்திரிக்குள் சென்றார்கள். டாக்டரின் அறைக்கு முன் காத்திருந்தார்கள். ஒருபெண் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினார்.
சிறிது நேரம் கழித்து பூங்கொடி நீங்க உள்ளே போங்க என்றார். கண்ணாயிரம் நானும் போவேன் என்று சொல்லி யபடி பூங்கொடி யுடன் உள்ளே சென்றார். டாக்டரின் முன்னே கிடந்த சேரில் அமர்ந்தார்கள். டாக்டர் அவர்களைபார்த்து யாருக்கு என்ன பிரச்சினை.. என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே டாக்டர், கையிலே பூனை கடிச்ச்ட்டு என்றார்.
டாக்டர் அப்படியா கையை காட்டுங்க என்றுசொல்ல, எனக்கு இல்ல டாக்டர். பூங்கொடியைத்தான் பூனைகடிச்சுட்டு.. என்றார்.
அப்படியா, நீங்க கையை காட்டுங்க என்று பூங்கொடி யிடம் சொல்ல அவர்கையை காட்டினார்.
கையில் உள்ள தடத்தைபார்த்த டாக்டர்.. என்னம்மா.. பூனைதான் கடிச்சுதா..பல் தடம் பலமா பதிஞ்சிருக்கு என்றபடி கண்ணாயிரத்தை பார்த்தார்.
கண்ணாயிரம் உடனே.. கருவாட்டை தூக்கவந்த பூனையை பூங்கொடி கம்பால் அடிச்சால்ல.. அதான் கோபத்தில் பூனைகடிச்சுட்டு.. என்றார்.
டாக்டர்… ஓ. அப்படியா.. நான்வேறமாதிரி நினைச்சேன். ஒருஊசி போட்டுக்குங்க.. மாத்திரை எழுதியிருக்கிறேன். மூணு வேளைசாப்பிடுங்க.. எல்லாம் சரியாயிடும் என்றார்.
பூங்கொடி உடனே டாக்டர்.. இவருக்கு சுகர் இருக்கான்னு செக்பண்ணுங்க.. அடிக்கடி பசிக்கு ன்னு சொல்லுறாரு என்றார் பூங்கொடி.
அப்படியா.. அவருக்கு பிளட் டெஸ்ட்டு எடுத்திடுவோம். எழுதியிருக்கிறேன் என்றார் டாக்டர்.
கண்ணாயிரம்.. அதை ஏன் சொன்ன.. பிளட் டெஸ்ட்டுன்னா.. ரத்தம் எடுக்க ஊசியெல்லாம் குத்துவாங்க..வலிக்கும்..பிறகு பாத்துக்கலாம்.. என்றார். அதெல்லாம் முடியாது.. பாருங்க.. அப்பதான் சாப்பாட்டை குறைக்கமுடியும்.. என்றார் பூங்கொடி.
அதை கண்ணாயிரம் கேட்கவில்லை. நைசாக.. வெளியே போகப்பார்த்தார்.
யாரு.. கண்ணாயிரம்.. என்றபடி வந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கண்ணாயிரத்தை அடையாளம் கண்டு அவரை அலாக்காக தூக்கி சென்றார்கள்
. பிளட்டெஸ்ட்டு எடுக்கும் முன் அவருக்கு பிரசர் செக் பண்ணினார்கள். பின்னர். பிளட்டெஸ்ட்டு எடுக்க ஊசியுடன் நர்ஸ் நெருங்கினார். கண்ணாயிரம் கண்களை இறுகமூடிக்கொண்டார். சிறிது நேரத்தில்.. ஆ.. என்று ஒரு சத்தம் கேட்டது.
(தொடரும்)

  • வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.