July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 698 பேருக்கு கொரோனா; 15 பேர் சாவு

1 min read

Corona for 698 people in Tamil Nadu today; 15 dead

9.12.2021

தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்று சற்று குறைவாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 698 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. 15 பேர் இறந்தனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் இன்று 698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 703-ஐ விட குறைவாகும். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 33 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 746 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 88 ஆயிரத்து 888 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.