தமிழகத்தில் இன்று 657 பேருக்கு கொரோனா; 12 பேர் சாவு
1 min read
Corona for 657 people in Tamil Nadu today; 12 dead
13.12.2021
தமிழகத்தில் இன்று புதிதாக 657 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 12 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்று புதிதாக 657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,36,046 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 26,91,756 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 702 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,624 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில்…
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,59,581 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று மேலும் 101 பேருக்கும், ஈரோட்டில் 53 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 5,55,96,111 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,00,085 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,46,60,522 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 99,851 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 7,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 15,97,039 பேர் ஆண்கள் (இன்று-382 பேர்), 11,38,969 பேர் பெண்கள் (இன்று-275 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் 47 பேருக்கும், கோவையில் 101, ஈரோட்டில் 53 பேருக்கும், திருப்பூர் 46 பேருக்கும், நெல்லையில் 3 பேருக்கும், தென்காசியி்ல் 2 பேருக்கும் தூத்துக்குடியில் 2 பேருக்கும் பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.