தமிழகத்தில் இன்று 649 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு
1 min read
Corona for 649 people in Tamil Nadu today; 9 deaths
14.12.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 657 ல் இருந்து 649 ஆக சற்று குறைந்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 695 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,03,889 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,தமிழகத்தில் மட்டும் 647 பேரும் வங்கதேசத்திலிருந்து வந்த ஒருவர் மற்றும் பீகாரிலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,36,695 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கோவிட்டினா உறுதியானவர்களில் 369 பேர் ஆண்கள், 280 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 695 பேர் கோவிட்டினாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கோவிட்டினா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,92,451 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 9 பேர் கோவிட்டினா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கோவிட்டினா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,633 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட்டினா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட்டினா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக இருந்த நிலையில் இன்று 123 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 107 பேருக்கும், ஈரோட்டில் 51 பேருக்கும், செங்கல்பட்டில் 49 பேருக்கும், நெல்லையில் 4 பேருக்கும், தென்காசியில் 2 பேக்கும், தூத்துக்குடியில் ஒருவருக்கும் இன்று கொரோனா கண்டறிப்பட்டு உள்ளது. தேனி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இல்லை.