June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

முப்படை தளபதிகளின் குழு தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமனம்

1 min read

Army Commander MM. Nervous appointment

16.12.2021

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில், தற்போது நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

பிபின் ராவத் மரணம்

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 8-ந்தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கோவை வெலிங்டன் பயிற்சி மையத்தில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ஹெலிகாப்டரில் பயணம செய்த 14 பேரும் உயிரிழந்தனர்.

பிபின் ராவத் மறைவையடுத்து அடுத்த இந்திய முப்படை தலைமைத் தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி இருந்து வருகிறது. இதில் ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தலைமை தளபதி விவேக்ராம் சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.

இந்த நிலையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முப்படைகளின் தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.