June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கொலை செய்ததாக கூறப்படும் எனது மகள் உயிரோடுதான் இருக்கிறார்; இந்திராணி முகர்ஜி பரபரப்பு கடிதம்

1 min read

My daughter, who was allegedly murdered, is still alive; Indrani Mukherjee sensational letter

16/12/2021
கொலை செய்ததாக கூறப்படும் எனது மகள் உயிரோடுதான் இருக்கிறார் என்று இந்திராணி முகர்ஜி பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்திராணி முகர்ஜி

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி இந்திராணி முகர்ஜி. பீட்டர் முகர்ஜி இந்திராணியின் இரண்டாவது கணவர். இந்திராணிக்கு முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போரா.

இந்திராணி தனது 2-வது கணவர் முகர்ஜியிடம் ஷீனா போராவை தங்கை என கூறி வந்து உள்ளார். இந்த நிலையில் ஷீனா போரா 2012 இல் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரை இந்திராணி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவம் இந்திராணி முகர்ஜியின் டிரைவர் ஷியாம்வர் ராய் துப்பாக்கியுடன் பிடிபட்ட போது அவர் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து இந்திராணி கொலை செய்ததை அவர் பார்த்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து இந்திராணி முகர்ஜி 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி – அவரது கணவர் பீட்டர் முகர்ஜி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக நடந்து வருகிறது.

உயிருடன்…

இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக தற்போது, ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும், காஷ்மீரில் இருப்பதாகவும் சிபிஐ இயக்குநருக்கு இந்திராணி முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இது இந்த வழக்கில் மேலும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிறையில் உள்ள ஒரு பெண் கூறியுள்ளார். அவர் ஷீனாவை காஷ்மீரில் பார்த்ததாகவும் சொல்கிறார். எனவே சிபிஐ ஷீனா போரா உயிருடன் இருப்பது குறித்து கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் இந்திராணி முகர்ஜி குறிப்பிட்டு உள்ளார்.

சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு இந்த கடிதமும் எழுதியுள்ளார். எனவே இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இறந்ததாக கூறப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.