தமிழகத்தில் இன்று 621 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 621 people in Tamil Nadu today; 11 people were killed
17.12.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 627 ல் இருந்து 621 ஆக சற்று குறைந்துள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 679 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,05,974 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,38,583 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,60,13,280 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 357 பேர் ஆண்கள், 264 பேர் பெண்கள். இன்று 679 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,94,509 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,667 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில் இன்று (டிச.,17 ம் தேதி) 127 ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவை 102 பேருக்கும் ஈரோட்டில் 48 பேருக்கும், செங்கல்பட்டில் 44 பேருக்கும் திருப்பூரில் 45 பேருக்கும், நெல்லையில் 5 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 4 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.