July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 613 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு

1 min read

Corona for 613 people in Tamil Nadu today; 9 deaths

18.12.2021
தமிழகத்தில் இன்ற கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 621 ல் இருந்து 613 ஆக சற்று குறைந்துள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். 665 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,00,175 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,39,196 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதியானவர்களில் 349 பேர் ஆண்கள், 264 பேர் பெண்கள். 665 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,95,174 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,676 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக இருந்த நிலையில் இன்று 125 ஆக சற்று குறைந்துள்ளது.
கோவையில் 101 பேருக்கும், ஈரோட்டில் 46 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும், திருப்பூரில் 44 பேருக்கும், நாமக்கல்லில் 39 பேருக்கும், சேலத்தில் 36 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 2 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.