கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து
1 min read
Fifteen helicopters of the three forces have crashed in the last 5 years
18.12.2021
கடந்த 5 ஆண்டுகளில் முப்படைகளின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து நடந்திருப்பதாக ராணுவ இணை மந்திரி கூறினார்.
ஹெலிகாப்டர் வித்துக்கள்
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்துள்ள முப்படை ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற மக்களவையில் ராணுவ இணை மந்திரி அஜய் பட் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2017 மார்ச் மாதம் முதல் இதுவரை முப்படைகளுக்கு சொந்தமான 15 ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதில் கடந்த 8-ந் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தும் அடங்கும்.
இதில் ராணுவம் மற்றும் விமானப்படையில் இருந்து தலா 7 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் ஒரு ஹெலிகாப்டரும் விபத்துக்குள்ளாகி உள்ளன. இந்த விபத்துகளில் 31 பேர் பலியாகி, 20 பேர் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு அஜய் பட் கூறினார்.