இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா; 132 பேர் சாவு
1 min read
Corona for 6,563 newcomers in India; 132 deaths
20/12/2021
இந்தியாவில் புதிதாக 6,563 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 132 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியால் கொரோனா
தற்போது நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வருகிறது. ஒரு பக்கம் ஒமைக்ரான் வைரஸ் பயமுறுத்தினாலும்கூட கொரோனா கட்டுக்குள் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த தொற்றால் 7,447 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை சிறிதளவு குறைந்து 7,081 பேருக்கு கொரோனா புதிதாக பாதித்தது.
இந்நிலையில் இன்று காலை புதிதாக 6,563 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இது நேற்றைய பாதிப்பை விட 7.3 சதவீதம் குறைவானதாகும். (இதில் கேரளாவில் மட்டும் 2,995 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்).
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 563 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,47,46,838 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,77,554 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.37 சதவீதமாக உள்ளது.
இன்று காலை வரை கொரோனா பாதிப்பில் இருந்து 8,077 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,41,87,017 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.39 சதவீதமாக உள்ளது.
மேலும் கொரோனா தொற்று கடந்த 572 நாட்களுக்குப் பிறகு குறைவான அளவாக தற்போது 82,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,37,67,20,359 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,82,079 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 8,77,055 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 66,51,12,580 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.