தமிழகத்தில் இன்று 602 பேருக்கு கொரோனா; 5 பேர் சாவு
1 min read
Corona for 602 people in Tamil Nadu today; 5 deaths
21.12.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 605 ல் இருந்து 602 ஆக சற்று குறைந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். 691 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,00,342 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 600 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து வந்த ஒருவரும் கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த ஒருவரையும் சேர்த்து மொத்தம் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,41,013 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 351 பேர் ஆண்கள், 251 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 691 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,97,244 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,691 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக இருந்த நிலையில் இன்று 132 ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவையில் 95 பேருக்கும், ஈரோட்டில் 50 பேருக்கும், திருப்பூரில் 44 பேருக்கும் செங்கல்பட்டில் 42 பேருக்கும், நெல்லைியல் 6 பேருக்கும், தூத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.