இந்தியாவில் தினசரி கொரோனா 13,154 பேராக உயர்வு; 268 பேர் சாவு
1 min read
Daily corona in India rises to 13,154; 268 deaths
30.12.2டி21
இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென்ற உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13,154 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டன. நேற்று 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நாட்டில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என இந்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
268 பேர் சாவு
இந்தியாவில் தற்போது 82,402 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது 0.24 சதவீதம் ஆகும். கொரோனாவுக்கு 268 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,80,860 ஆக உயர்ந்து உள்ளது. 3 கோடியே 42 லட்சத்து 58 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இது 98.38 சதவீதம் ஆகும்.
கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், இன்று 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகி உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஒமைக்ரான்
இந்தியாவில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று, நாட்டில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதார துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
நாட்டில், டெல்லி 263, மராட்டியம் 252, குஜராத் 97 ஆகியவை அதிக ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து, ராஜஸ்தான் 69, கேரளா 65, தெலுங்கானா 62 ஆகியவை உள்ளன. தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.