சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது
1 min read
Sahitya Akademi Award for short story writer Ambai
30.12.2021
சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாடமி
நாடு முழுவதும் உள்ள எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசால் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசு 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 20 மொழிகளில் உள்ள படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ளது.
அம்பை
இதில் தமிழகத்தை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அவர் எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ளது.