June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு

1 min read

Corona for 2,731 people in Tamil Nadu today; 9 deaths

4.1.2022

தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று 1,728 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு 2,700- ஐ தாண்டி அதிரவைத்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,489 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,805 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12,412 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 674 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 876 ஆக இருந்த நிலையில் இன்று 1,489 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 290 பேருக்கும், கோவையில் 120 பேருக்கும், திருவள்ளூரில் 147 பேருக்கும், வேலூரில் 105 பேருக்கும், நெல்லையில் 22 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 42 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.