வழிப்பாட்டு தலங்கள் பொங்கல் முதல் தைப்பூசம் வரை மூடல்; 31- ந் தேதி வரை ஊரங்கு நீட்டிப்பு
1 min read
Closing of places of worship from Pongal to Thaipusam; Extension of curfew till 31st
10.1.2022
தமிழகத்தில் வழிப்பாட்டு தலங்கள் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை அதாவது பொங்கல் முதல் தைப்பூசம் வரை மூட உத்தரவிடப்பட்டு உ்ளளது. மேலும் 31- ந் தேதி வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு
தமிழகத்தில் 2020 மார்ச்சில் கொரோனா முதல் அலை; 2021 மே மாதம் இரண்டாவது அலை பரவத் துவங்கியது. அத்துடன், உருமாறிய டெல்டா, ஒமைக்ரான் தொற்றுகளின் பரவலும் அதிகரித்து தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்து உள்ளது.
தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 6ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை, இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வழிபாட்டுத் தலங்கள்
- தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வழிபாட்டு தலங்கள் ஜன. 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை ( அதாவது பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசம் வரை ) மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் செல்ல அனுமதியில்லை.
பொதுமுடக்கம்
- வரும் 16-ம் தேதி ஞாயிறன்று பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது
- பொங்கல் பண்டிகையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் பேருந்தில் 75 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும், அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகளும் தொடரும்.
- கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், விதி மீறும் வணிக நிறுவனங்களை மூட மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள் அனைவரும் தவறால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும்.
- பொதுஇடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- கொரோனா கட்டுப்பட்டு விதிமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதி மீறும் நிறுவனங்கள், தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.