தமிழகத்தில் இன்று 13,990 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 13,990 people in Tamil Nadu today; 11 people were killed
10.1.2022
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,35,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 13,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று 12,895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தினசரி பாதிப்பு 6190-ஆக உள்ளது. செங்கல்பட்டில் 1696 பேருக்கும், கோவையில் 602 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 508 பேருக்கும், திருவள்ளூரில் 1054 பேருக்கும், திருப்பூரில் 238 பேருக்கும், வேலூரில் 236 பேருக்கும், தூத்துக்குடியில் 176 பேருக்கும், திருச்சியில் 348 பேருக்கும்,
நெல்லையில் 137 பேருக்கும், தென்காசியில் 41 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 2547 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 14 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.
11 பேர் சாவு
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 62,767 ஆக உயர்ந்துள்ளது.
ஒமைக்ரான்
தமிழகத்தில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 185 ஆக உயர்ந்துள்ளது. 179 பேர் ஒமைக்ரான் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.