தமிழகத்தில் இன்று 15,379 பேருக்கு கொரோனா; 20 பேர் சாவு
1 min read
Corona for 15,379 people in Tamil Nadu today; 20 dead
11.1.2022
தமிழகத்தில் இன்று 15,379 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர். 3,043 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 13,990 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 15,379 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,35,672 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 15,330 பேர், இலங்கை 3, கத்தார் 2, வங்கதேசம் 2, ஐக்கிய அரபு எமிரேட் 1, என வெளிநாடு சென்று திரும்பிவர்கள் மற்றும் மேற்குவங்கம் 18, பீஹார் 6, கேரளா 3, டில்லி 3, குஜராத் 3, அசாம் 2 ,ஆந்திரா 2, சிக்கிம் ஜார்கண்ட், உ.பி., மாநிலத்தில் இருந்து வந்த தலா ஒருவரையும் சேர்த்து மொத்தம் 15,379 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,29,655 ஆக அதிகரித்து உள்ளது. .
இன்று கொரோனா உறுதியானவர்களில் 9,159 பேர் ஆண்கள், 6,220 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 3,043 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,17,686 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவ மனையில் 11 பேரும் , அரசு மருத்துவமனையில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,886 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,190 ஆக இருந்த நிலையில் இன்று 6,484 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 1665 பேருக்கும, கோவையில் 863 பேருக்கும், திருவள்ளூரில் 893 பேருக்கும், நெல்லையில் 479 பேருக்கும், தென்காசியில் 26 பேருக்கும், தூத்துக்குடியில் 146 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.