தமிழகத்தில் இன்று 17,934 பேருக்கு கொரோனா; 19 பேர் சாவு
1 min read
Corona for 17,934 people in Tamil Nadu today; 19 dead
12.1.2022
தமிழகத்தில் இன்று 17,934 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர். 4,039 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 15,379 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 17,934 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் 1,56,281 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 17,898 பேர், ஐக்கிய அரபு எமிரேட் 4 பேர், கனடா 2 பேர், சிங்கப்பூர் 1 என வெளிநாடு சென்று திரும்பிவர்கள் மற்றும் மேற்குவங்கம் 12, பீகார் 5, அசாம் 4 ,ஆந்திரா 4 ஜார்கண்ட் 3, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என மொத்தம் 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,47,589ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 10,652 பேர் ஆண்கள், 7,282 பேர் பெண்கள். இன்று 4,039 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,21,725ஆக உயர்ந்துள்ளது.
19 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,905ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,484 ஆக இருந்த நிலையில் இன்று 7,372 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 1840 பேருக்கும், கோவையில் 981 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 620 பேருக்கும், நெல்லையில் 451 பேருக்கும், கன்னியாகுமரியில் 388 பேருக்கும், தென்காசியில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 289 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.