பிரிந்த சகோதாரர்கள் 74 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
1 min read
Divorced brothers meet after 74 years
12.1.2022
நாடு பிரிவினையின் போது பிரிந்து சென்ற சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிந்தனர்
கடந்த 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த பின், இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்தது. அப்போது அண்ணன் தம்பிகளில் முகம்மது சித்தி பாகிஸ்தான் சென்றார். சகோதரர் ஹபீப் இந்தியாவில் வசித்தார்.
பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்களும், 74 ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை. இந்நிலையில் இன்று கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலத்தில் சந்தித்தனர். இருவரும் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.