மேற்கு வங்காள ரெயில் விபத்தில் 3 பேர் பலி; 20 பேர் காயம்
1 min read
3 killed in West Bengal train accident; 20 people were injured
14.1.2022
மேற்கு வங்கத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ரெயில் விபத்து
ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற குவஹாட்டி – பிகானர் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ரெயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணிகளும் நடந்துவருகிறது. இதுவரை 3 பேர் பலியார்கள். 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் “பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்து நிலமையை விவரித்துள்ளேன். விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன்” என்று டுவீட் செய்துள்ளார்.