தமிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா; 26 பேர் சாவு
1 min read
Corona for 23,459 people in Tamil Nadu today; 26 deaths
14.1.2022
தமிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர். 9,026 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 20,911 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 23,459 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் 1,53,046 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,438 பேர், வங்காளதேசத்திற்கு சென்று திரும்பிவர்கள் 9 பேர், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் சென்று திரும்பியவர்கள் தலா ஒருவர் மற்றும் மேற்குவங்கம், கர்நாடகம், உத்தரபிரசேததம், தலா 2 பேர் பீகார், சிக்கிம், திரிபுரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,91,959 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 13,940 பேர் ஆண்கள், 9,519 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 9,026 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,36,986 ஆக உயர்ந்துள்ளது.
26 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 26 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,956 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,218 ஆக இருந்த நிலையில் இன்று (ஜன.14 ம் தேதி) 8963 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 2504 பேருக்கும், கோவையில் 1564 பேருக்கும், திருவள்ளூரில் 1393 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 802 பேருக்கும், நெல்லைியல் 353 பேருககும் தூத்துக்குடியில் 315 பேருக்கும், தென்காசியில் 20 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.