தமிழகத்தில் இன்று 23,989 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு
1 min read
Corona for 23,989 people in Tamil Nadu today; 11 people were killed
15.1.2022
தமிழகத்தில் இன்று 23,989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10,988 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 23,459 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 23,989 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,43,536 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,978 பேர், ஜார்கண்ட் 3, பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்திலிருந்து திரும்பியவர்கள் தலா இருவரும் குஜராத், சிக்கிம்,கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,15,948 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 14,242 பேர் ஆண்கள், 9,747 பேர் பெண்கள். 10,988 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,47,974 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 11 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,967 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,963 ஆக இருந்த நிலையில் இன்று 8,978ஆக அதிகரித்துள்ளது.*