June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 23,975 பேருக்கு கொரோனா; 22 பேர் சாவு

1 min read

Corona for 23,975 people in Tamil Nadu today; 22 deaths

16.1.2022
தமிழகத்தில் இன்று 23,975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் உயிரிழந்துள்ளனர். 12,484 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 23,989 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 23,975 ஆக சற்று குறைந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,40,720 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 23,957 பேர், வங்கதேசம் சென்று திரும்பியவர்கள் 3 பேரும் பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா 4 பேரும் ஜார்கண்ட் ,மற்றும் ஆந்திரா சென்று திரும்பிய தலா இருவரும் மேற்குவங்கம், மேகாலயா மற்றும் கேரள மாநிலம் சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 23,975 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,39,923 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 14,197 பேர் ஆண்கள், 9,778 பேர் பெண்கள். 12,484 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,60,458 ஆக உயர்ந்துள்ளது.

22 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 22 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,989 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,978 ஆக இருந்த நிலையில் இன்று 8,987ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 2,701 பேருக்கும், கோவையில் 1866 பேருக்கும், திருவள்ளூரில் 1273 பேருக்கும், நெல்லையில் 256 பேருக்கும், தென்காசியில் 194 பேருக்கும், தூத்தூக்குடியில் 238 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.