June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பரவல் அதிகமாக பரவுவதால் கேரளாவில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்

1 min read

Strict restrictions will be imposed in Kerala from tomorrow due to the spread of corona

16.1.2022

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில சுகாதாரதுறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கேரளா முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாளை முதல் வழிபாட்டு தலங்களில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணங்கள், இறுதி சடங்குகளிலும் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் கூறப் பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் அதிகம் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.

மேலும் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மாநாடுகள், பொதுக்கூட்டங்களை ஒத்தி வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கேரளாவில் இன்று முதல் அமலுக்கு வர உள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது. அரசின் அறிவிப்புப்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.